தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும் நாளையும் மட்டும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. எனவே கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10-ஆம் தேதி முதல் 14 நாட்களுக்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கின் காலை 6 மணி முதல் 10 மணி வரை மளிகை கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கக் கூடிய கடைகள் திறந்து இருக்கலாம் என அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்களின் நலன் கருதி இன்றும், நாளையும் மட்டும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரவு 9 மணி வரையும், நாளை காலை 6:00 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரு தினங்களிலும் மால்கள் திறப்பதற்கான அனுமதி கொடுக்கப்படவில்லை.
.
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…