#Breaking : தமிழகத்தில் இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி!

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும் நாளையும் மட்டும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. எனவே கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10-ஆம் தேதி முதல் 14 நாட்களுக்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கின் காலை 6 மணி முதல் 10 மணி வரை மளிகை கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கக் கூடிய கடைகள் திறந்து இருக்கலாம் என அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்களின் நலன் கருதி இன்றும், நாளையும் மட்டும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரவு 9 மணி வரையும், நாளை காலை 6:00 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரு தினங்களிலும் மால்கள் திறப்பதற்கான அனுமதி கொடுக்கப்படவில்லை.
.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025