#BREAKING: கர்நாடக தேர்தலில் இருந்து விலகியது அதிமுக!

Published by
பாலா கலியமூர்த்தி

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் வேட்மனுவை வாபஸ் பெற்றதால் போட்டியிடாமல் விலகியுள்ளது அதிமுக. 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக 224 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. இதற்கான, வேட்புமனு தாக்கல் முடிந்து, இன்று வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் என அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் 3 தொகுதிகளுக்கும், இபிஎஸ் ஒரு தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்தனர்.

கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட வாய்ப்பு உள்ளது என கூறப்பட்ட நிலையில், புலிகேசி நகர் தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்திருந்தார் இபிஎஸ். இதன்பின், அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அடுத்து, இரட்டை இலை சின்னமும் அவர்கள் வசமானது.

இது ஓபிஎஸ்க்கு பின்னடைவாக இருந்தது. இந்த சமயத்தில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியன் மனு நிராகரிக்கப்பட்டது. அதிமுகவின் பெயர் பாதிக்கப்பட கூடாது என்பது காரணமாக மீதமுள்ள 2 தொகுதி வேட்பாளர்களையும் வாபஸ் பெறுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இன்று அறிவித்திருந்தது.

மறுபக்கம், புலிகேசி தொகுதியில் இபிஎஸ் ஆதரவாளர் அன்பரசன் வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால், பாஜகவை எதிர்த்து அதிமுக கர்நாடகத்தில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், புலிகேசி தொகுதியில் இபிஎஸ் ஆதரவாளர் அன்பரசன் வேட்புமனு வாபஸ் பெறுவதாக அதிமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில், (159) புலிகேசிநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர் அன்பரசன் அவர்களை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டனர்.

பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று, கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான D. அன்பரசன் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுள்ளார். கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்தச் செய்தி வெளியிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் வேட்மனுவை வாபஸ் பெற்றதால், போட்டியிடாமல் விலகியுள்ளது அதிமுக.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

2 hours ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

6 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

6 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

6 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

8 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

8 hours ago