#BREAKING: அதிமுக பொதுக்குழு செல்லும் – தீர்ப்பின் முழு விவரம் வெளியீடு!

Published by
பாலா கலியமூர்த்தி

இரு தலைவர்களும் இணைந்துதான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்று உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு.

ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், 2 நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. இதன் மூலம், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் வழங்கிய தீர்ப்பின் முழு விவரம் வெளியாகியிருக்கிறது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு 128 பக்கங்களில் தீர்ப்பு வழங்கியுளனது. அதில், ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டியதில் தவறில்லை. அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் கலவாதியாகிவிட்டதா என்பது பற்றி பிரதான வழக்கில் தான் முடிவு எடுக்க முடியும். சிவில் வழக்குதான் தீர்மானிக்கும்.

உட்கட்சி விவகாரங்களில் சிவில் வழக்கு தொடர முடியாது என்று கூற முடியாது என நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து செயல்பட முடியாதபோது இருவரும் சேர்ந்து கூட்டங்களை கூட்ட வேண்டும் என உத்தரவிட முடியாது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்துதான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்ற உத்தரவு அதிமுகவின் செயல்பாட்டை முடக்கிவிடும். பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ஈபிஎஸ் விட்டுக்கொடுத்தார்.

ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழுவை தலைமை கழக நிர்வாகிகள் கூட்டியதில் தவறில்லை. ஜூன் 23 பொதுக்குழு அன்றே ஜூலை 11 பொதுக்குழு தொடர்பான அறிவிப்பு வெளியானது செல்லும். ஜூன் 23 பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில் 23-க்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது. ஓபிஎஸ் இருந்தபோது தான் ஜூலை 11-ல் பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டதால் தனக்கு தெரியாது என கூற முடியாது.

மோதல் இருக்கும் நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து பொதுக்குழுவை கூட்டுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. அடிப்படை உறுப்பினர்களால் தேர்வாகும் உறுப்பினர்கள் உள்ள அதிமுக பொதுக்குழுவிக்கே உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது. சிறப்பு பொதுக்குழுவிக்கு இன்னொரு நோட்டீஸ் தர அவசியமில்லை. ஜூன் 23-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பை பொதுக்குழுவுக்கான முறையான நோட்டீஸாக கருத முடியும். ஓபிஎஸ்-யுடன் மோதல் போக்கு இருந்ததால் ஜூன் 23 பொதுக்குழுவை அவை தலைவர் கூட்டியது சட்ட விரோதம் என சொல்ல முடியாது. எனவே, ஓபிஎஸ், ஈபிஎஸ் செயல்படுங்கள் என தனி நீதிபதி உத்தரவிட்டது தவறு என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

22 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

24 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

56 mins ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

3 hours ago