அதிமுக அலுவலக சாவி விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைத்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தபோது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் எவ்வாறு உரிமை கோருகிறார் என உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினர்.
மீண்டும் உரிமையியல் வழக்கு தொடுத்து அலுவலகத்தை மீட்க சட்ட வழிகளை நாடலாமே என்றும் தெரிவித்துள்ளனர். ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்றும் ஜனநாயக வழியில் அல்லாது அரசியல் கட்சி செயல்படுவதை ஏற்க முடியுமா என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இன்னும் நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தான் உரிமை கோருகிறேன் என ஓபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இருப்பினும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திர சூட், ஹீமா கோலி அமர்வு ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…