#BREAKING: அதிமுக அலுவலக சாவி வழக்கு – ஓபிஎஸ் மனு தள்ளுபடி!

Default Image

அதிமுக அலுவலக சாவி விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைத்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தபோது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் எவ்வாறு உரிமை கோருகிறார் என உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினர்.

மீண்டும் உரிமையியல் வழக்கு தொடுத்து அலுவலகத்தை மீட்க சட்ட வழிகளை நாடலாமே என்றும் தெரிவித்துள்ளனர். ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்றும் ஜனநாயக வழியில் அல்லாது அரசியல் கட்சி செயல்படுவதை ஏற்க முடியுமா என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இன்னும் நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தான் உரிமை கோருகிறேன் என ஓபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இருப்பினும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திர சூட், ஹீமா கோலி அமர்வு ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்