#BREAKING: டிச.27ம் தேதி அதிமுக முக்கிய ஆலோசனை – இபிஎஸ் அறிவிப்பு

Default Image

டிச.27 அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என்று இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவிப்பு.

டிசம்பர் 27-ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் டிசம்பர் 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி துணை தலைவர் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பொதுக்குழு வழக்கு விவகாரம், நாடாளுமன்ற தேர்தல் ஆயுத்தப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களும் பங்கேற்க உள்ளதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்