#BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு – 2வது நாளாக விசாரணை தொடக்கம்!

Default Image

அதிமுக பொதுக்குழு விதிப்படிதான் கூட்டப்பட்டது என ஈபிஎஸ் தரப்பு வாதம்.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்குகளின் விசாரணை 2வது நாளாக இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. நேற்று ஓபிஎஸ் தரப்பு, வைரமுத்து தரப்பு முடிந்த நிலையில், இன்று ஈபிஎஸ் தரப்பில் வாதங்கள் தொடர்கின்றன. உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது ஏன்? என்றும் பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா?  என்பதை விளக்குமாறு நேற்று நீதிபதி ஜி.ஜெயசந்திரன் கூறியிருந்தார். நிரந்திர அவை தலைவராக கட்சி விதிப்படி தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டாரா? என்றும் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், இன்று இரண்டாவது னால விசாரணையில், ஈபிஎஸ் தரப்பு கூறுகையில், அதிமுக பொதுக்குழு விதிப்படிதான் கூட்டப்பட்டது. ஜூலை 11-ல் பொதுக்குழு கூட்டப்படும் என ஜூன் 23 பொதுக்குழுவிலேயே அறிவிக்கப்பட்டது. ஜூலை 11 பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27-ஆம் தேதி தயாரிக்கப்பட்டது.

ஜூன் 23 பொதுக்குழுவுக்கு நிகழ்ச்சி நிரல் ஏதும் தயாரிக்கப்படவில்லை. ஜூலை 1ல் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தலைமை கழக நிர்வாகிகள் மூலம் அழைப்பு அனுப்பப்பட்டது.  ஜூன் 23 பொதுக்குழு தீர்மானங்கள் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்தவை வரைவு தீர்மானங்கள் தான் என நீதிபதி ஜெயசந்திரன் முன் ஈபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதாடி வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்