அதிமுக பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்தலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு.
அதிமுக பொதுக்குழுவுக்கு, கட்சி விதிகளை திருத்துவதற்கு தடை கோரியும் கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன்,சுரேன் பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஈபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுகுளுதான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு, பொதுக்குழுவுக்கே உள்ளது. பொதுக்குழுவில் இது நடக்கும், இது நடக்காது என உத்தரவாதம் அளிக்க முடியாது. நாளை கட்சி சட்ட விதிகளில் திருத்தம் நடக்கலாம், நடக்காமலும் இருக்கலாம். பொதுக்குழுவில் தான் உறுப்பினர்களின் விருப்பம் அறிவிக்கப்படும். பெரும்பான்மையே முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன், கடந்த டிசம்பரில் உட்கட்சி தேர்தல் நடந்து ஒருமனதாக ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது.
23 வரைவு தீர்மானங்களுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து இமெயில் வந்தது. கட்சி அலுவலகத்தில் இருந்து வந்த 23 வரைவு தீர்மானங்களுக்கு ஓபிஎஸ் ஒப்புதல் கொடுத்துள்ளார். இந்த 23 வரைவு தீர்மானங்களை தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுவிட்டது என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து அதிமுக பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்தலாம் என்றும், அதிமுக பொதுக்குழுவுக்கு எந்த நிபந்தனையும் இல்லை என்றும், கட்சி விதிகளை திருத்த தடையில்லை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்சி விதிகளை திருத்த தடையில்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளதால் நாளை வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…
சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த…
இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட்…
சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
ஹரியானா : இன்று காலை 7 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி…