#BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு – சற்று நேரத்தில் தீர்ப்பு!

Default Image

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு.

ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம். அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. அதன்படி மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு சற்று நேரத்தில் 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது.

முன்னதாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுகவில் ஜூன் 23 – க்கு முந்தைய நிலையே தொடரும் என்றும் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது எனவும் தனி நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டிருந்தார். கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு மீதான ஓபிஎஸ், இபிஎஸ் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான மேற்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு சற்று நேரத்தில் வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம். அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றம் இன்று என்ன தீர்ப்பு வழங்கப் போகிறது என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அரசியல் களம் ஒரே பரபரப்பாக காணப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்