#Breaking:முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு

Published by
Edison

முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி குற்றவாளி என சிறப்பு  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னதாக, 1991-96 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில்,ஊழல் வழக்கில் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் இந்திர குமாரி,அவரது கணவர் பாபு மற்றும் சண்முகம் ஆகிய 3 பேர் குற்றவாளிகள் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளை வழிநடத்துவதாகக் கூறி அரசிடம் இருந்து முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி கணவர் பாபு ரூ.15.45 லட்சம் முறைகேடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில்,இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரி உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து,3 பேரின் தண்டனை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக இந்திர குமாரி உள்ளார்.மேலும்,வழக்கில் தொடர்புடைய கிருபாகரன் இறந்துவிட்ட நிலையில்,வெங்கடேசன் என்பவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி தற்போது திமுகவில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…

10 hours ago

IND vs NZ : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி.. யாருக்கு சாதகம்? பிட்ச் & வானிலை ரிப்போர்ட்.!

துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…

11 hours ago

ஐயோ போச்சா!! தொடரும் தவெக போஸ்டர் பிழைகள்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…

12 hours ago

தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட தவெக தொண்டர்கள் – விஜய் கடும் கண்டனம்.!

சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…

14 hours ago

‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! சிறப்பு என்ன?

சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…

14 hours ago

திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்… தவெக நிர்வாகிகள் கைது.!

நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…

15 hours ago