விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேரை 6 நாள்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
விருதுநகரில் தனியார் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை ஹரிஹரன் என்பவர் காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக ஹரிஹரன் எடுத்துள்ளார். பின்னர், ஹரிஹரன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
அந்த வீடியோவை அவரகள் சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி அப்பெண்ணை பலமுறை வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், ஹரிஹரன் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இதைதொடர்ந்து, விருதுநகர் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் உள்ள ஹரிஹரன், அகமது, மாடசாமி பிரவீன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இவர்கள் 4 பேரையும் 6 நாள்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
விருதுநகரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் கைதானவர்களில் 4 பேரின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. செல்போன்களை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்து சைபர் கிரைம் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…