#BREAKING: கூடுதலாக 1,450 மருத்துவ மாணவர் சேர்க்கை – அமைச்சர் அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 4,308 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் கூடுதலாக 1,450 மருத்துவ மாணவர சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் பேசிய அமைச்சர், ரூ.1,018.85 கோடியில் 19 மருத்துவமனைகள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் 12 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரூ.15 கோடியில் புதிய ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 4,308 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார். இதில் 1,021 உதவி மருத்துவர்கள், 3,287 மருத்துவம் சார்ந்த இதர பணியிடங்கள் நிரப்பப்படும் என கூறினார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ரூ.423.64 கோடியில் ஒருங்கிணைந்த ஆய்வக சேவைகள் தொடங்கப்படும் என்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொதுமக்களுக்கு நீரிழிவு நோய் பரிசோதனை காலை 7 மணிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் மருத்துவம் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அமைச்சர், முழு உடல் பரிசோதனை மையம் அனைத்து மருத்துவமனைகளிலும் இருக்கும் சாதாரண விஷயம், அதற்கு போய் அம்மாவின் பெயரை அதிமுக வைத்தது. பெயர் மாற்றும் அளவிற்கு, காழ்ப்புணர்ச்சி திமுக அரசுக்கு இல்லை. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்றால் வயிறு எரிகிறது, அற்புதமான கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றியுள்ளனர்.

ஆட்சி அமைந்ததும், மருத்துவமனையை மாற்றிவிடுவார்கள் என்றனர். ஆனால், புற்றுநோய் ரோபோடிக் சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. மருந்துகள் பற்றாக்குறை என்பதே தமிழ்நாட்டில் இல்லை. முந்தைய அரசு போல் தேவையற்ற மருந்துகளை வாங்கி இருப்பு வைப்பதில்லை, தேவையானவை மட்டும் தான் வாங்குகிறோம். மேலும், தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 1,74,831 ஆக உயர்த்தப்பட்டுள்ளது  என்றும் குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

3 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

25 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

29 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

43 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

55 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago