#BREAKING: ஆவின் இனிப்புகள் விலை உயர்வு இன்று முதல் அமல்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆவின் நிறுவனத்தின் மேலும் சில பொருட்களின் விலை உயர்வு என அறிவிப்பு.

ஆவின் பால் பொருட்களின் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஆவின் இனிப்பு வகை பொருட்களின் விலையை உயர்த்தி, இன்று முதல் அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ரசகுலா, குலாப் ஜாமுன் உள்ளிட்ட 17 இனிப்பு வகைகளின் விலையை உயர்த்தியுள்ளது ஆவின் நிறுவனம். ரூ.20 முதல் ரூ.80 வரை இனிப்பு வகைகளின் விலையை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பால், தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டது.

இதுகுறித்தும் பல்வேறு அரசியல் கட்சிகள், கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகளும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். இந்த நிலையில், ஆவின் நிறுவனத்தின் மேலும் சில பொருட்களின் விலை உயர்த்தி, இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குலாப் ஜாமுன் 125 கிராம் 5 ரூபாய் உயர்ந்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மைசூர்பா அரை கிலோ 230 ரூபாயில் இருந்து 270 ரூபாயாகவும், பால்கோவா 100 கிராம் 47 ரூபாயில் இருந்து 55 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

AavinTN

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago