#BREAKING: ஆவின் பொருட்களின் விலை உயர்வு!

Default Image

ஆவின் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு.

ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. உணவுப்பொருட்கள் மீது 5% ஜிஎஸ்டி வரி விதிப்பால் தயிர், மோர், லஸ்ஸி, நெய் உள்ளிட்டவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. தற்போது இருந்து வரும் விலையைவிட சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் நெய்க்கு ரூ.50 , ஒரு லிட்டர் தயிருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது என பால் முகவர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.

200 கிராம் தயிர் விலை ரூ.25 லிருந்து ரூ.28 ஆக அதிகரித்துள்ளது. தயிர் 100 கிராம் ரூ.10 லிருந்து 12 ரூபாய் ஆகவும், 1 கிலோ ரூ.100ல் இருந்து ரூ.120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிராம் ஆவின் தயிர் ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்று, 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.535ல் இருந்து ரூ.580 ஆகவும், 500ml ஆவின் நெய் ரூ.275ல் இருந்து ரூ.290 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் அந்நிர்வாகம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்