சென்னை:நடைமுறையை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எல்லாவற்றுக்கும் பொதுநல வழக்கு தொடர்வதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை, கோவை மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெரும்பாலான டெண்டர்கள் கடந்த அதிமுக ஆட்சி காலத்தின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் முறைகேடாக வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மனு தள்ளுபடி:
இந்நிலையில்,சென்னை,கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் 2014-2018 வரை மேயராக இருந்தவர்களையும் வழக்கில் சேர்க்க கோரி மனு தாக்கல் செய்த நேர்வழி இயக்கத்தின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
எல்லாவற்றுக்கும் பொதுநல வழக்கா?:
மேலும்,நடைமுறையை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எல்லாவற்றுக்கும் பொதுநல வழக்கு தொடர்வதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.எல்லாவற்றுக்கும் பொதுநல வழக்கு தொடர்வது நீதிமன்றத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…