#BREAKING: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5471 பேர் டிஸ்சார்ஜ்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5471 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று மேலும் 6,986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,06,737 லிருந்து 2,13,723 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து கொண்டு வந்தாலும் குணமானோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 5,471 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர் இதுவரை 1,56,526 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று 85 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,494 ஆக உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025