கொரோனா வைரசால் இந்தியாவில் 724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 17 உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையெடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி காணொளி மூலம் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், காவல்துறை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதையெடுத்து தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக புதியதாக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள், 1,508 ஆய்வக டெக்னீசியன்களை நியமிக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் 200 ஆம்புலன்ஸ்களை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மருத்துவபணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் 3 நாள்களில் பணியில் சேரவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…