சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க கீழமை நீதிமன்றத்துக்கு கூடுதலாக 5 மாதம் அவகாசம்.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்து முடிக்க கீழமை நீதிமன்றத்துக்கு கூடுதலாக 5 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் நகல் கிடைத்த 5 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க கீழமை நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக தடயவியல் சோதனை முடிவுகள் இன்னும் கிடைக்காததால் அவகாசம் தேவை என்றும் செல்போன் உள்ளிட்ட உபகரணங்களில் அழிக்கப்பட்ட விவரங்கள் கிடைத்தால் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்பதால் கால அவகாசம் தேவைப்படுகிறது என சிபிஐ தெரிவித்துள்ளது.
இதையடுத்து, வழக்கில் 105 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டியிருக்கும் நிலையில், இதுவரை 20 சாட்சியங்களிடம் மட்டுமே விசாரணை நடைபெற்றுள்ளது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒருவரிடம் மட்டுமே விசாரணை நடைபெற்று வருவதாக கீழமை நீதிமன்றம் தரப்பில் தெரிவித்த நிலையில், அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…