#Breaking:இலங்கையிலிருந்து மேலும் 3 பேர் தமிழகம் வருகை!

Default Image

இலங்கை அந்நியச்செலாவணி கையிருப்பு குறைவு காரணமாக வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.இதனால்,அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால்,இலங்கை அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி கலைக்க முயன்றனர்.இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில்,கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து மேலும் 3 பேர் கடல் வழியாக தமிழகம் வந்தடைந்துள்ளனர்.

இலங்கையிலிருந்து ஏற்கனவே 10 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் தமிழகம் வந்த நிலையில்,தற்போது இலங்கையிலிருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உட்பட 3 பேர் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்