#BREAKING: 2ஆம் வகுப்பு மாணவன் பலி – பள்ளி ஊழியர் கைது!

Published by
பாலா கலியமூர்த்தி

மாணவன் உயிரிழப்பு தொடர்பாக பள்ளி ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், கைது செய்யப்பட்டார்.

சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் இன்று காலை பள்ளி வேன் மோதி 2-ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் ஏற்கனவே வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தனியார் பள்ளி ஊழியர் ஞானசக்தி கைது செய்யப்பட்டார். பேருந்திலிருந்து மாணவர்களை இறங்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தியையும் வளசரவாக்கம் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, மாணவர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. அதன்படி, பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், பள்ளி முதல்வர் தனலட்சுமி, மாணவர்களை வேனில் இருந்து இறங்கிவிடும் ஊழியர் ஞானசக்தி மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாகாத மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தனியார் பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ் விசாரணை நடத்தினார். பள்ளி வேன் மோதி மாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து, இன்றைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தனியார் பள்ளிக்கு மெட்ரிகுலேசன் இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். பள்ளி ஊழியர், தாளாளர், தலைவர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், ஞானசக்தி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live : ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் முதல்.., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை.!

Live : ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் முதல்.., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை.!

சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…

9 minutes ago

புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…

30 minutes ago

வெளியானது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்.! தமிழகம் முழுவதும் ரசிகர்கள் ஆரவாரம்…,

சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…

31 minutes ago

இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…

2 hours ago

வலுக்கும் வரி போர்: அமெரிக்காவுக்கு பதிலடியாக 84% வரி விதித்த சீனா.!

சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…

3 hours ago

பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…

11 hours ago