#BREAKING: 2ஆம் வகுப்பு மாணவன் பலி – பள்ளி ஊழியர் கைது!

Published by
பாலா கலியமூர்த்தி

மாணவன் உயிரிழப்பு தொடர்பாக பள்ளி ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், கைது செய்யப்பட்டார்.

சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் இன்று காலை பள்ளி வேன் மோதி 2-ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் ஏற்கனவே வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தனியார் பள்ளி ஊழியர் ஞானசக்தி கைது செய்யப்பட்டார். பேருந்திலிருந்து மாணவர்களை இறங்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தியையும் வளசரவாக்கம் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, மாணவர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. அதன்படி, பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், பள்ளி முதல்வர் தனலட்சுமி, மாணவர்களை வேனில் இருந்து இறங்கிவிடும் ஊழியர் ஞானசக்தி மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாகாத மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தனியார் பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ் விசாரணை நடத்தினார். பள்ளி வேன் மோதி மாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து, இன்றைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தனியார் பள்ளிக்கு மெட்ரிகுலேசன் இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். பள்ளி ஊழியர், தாளாளர், தலைவர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், ஞானசக்தி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

16 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

17 hours ago