#Breaking : தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இட மாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Default Image

தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.

முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் பல்வறு மாற்றங்கள் மற்றும் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு கொண்டிருக்கின்றது. தற்பொழுதும் தமிழகத்தில் உள்ள 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு தமிழக தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

அதன் படி நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த பிரவீன் நாயர் ஊரக வளர்ச்சி மற்றும் கிராமப்புற வளர்ச்சித்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பத்திர பதிவு துறை இயக்குனராகவும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலாத்துறை இயக்குனராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தமிழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணா துரை, வேலூர் மாவட்ட ஆட்சியர் ஏ.சண்முகசுந்தரம், வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் லட்சுமி ப்ரியா உள்ளிட்ட 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழக தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்