#BREAKING: 18 மாவட்டங்களில் 2 மணி நேரத்தில் மழை – வானிலை ஆய்வு மையம்

Default Image

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 2 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்.

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் சேலத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்.

தருமபுரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனீ, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்