#Breaking: தமிழகத்தில் 16000 ஐ கடந்தது கொரோனா பாதிப்பு..!

Default Image

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டிய நிலையில், ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோன தோற்றால் மொத்தமாக 111 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மேலும் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 587 பேர் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா கண்டறியப்பட்ட 765 பேரில் 40 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள் என்றும் 76 பேர் வெளிமாநிலம் சென்று வந்தவர்கள் என்றும் கூறியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, இன்று 833 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 8324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 8 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தற்போது 7,839 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்