பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீட்டுக்கு 3 நீதிபதிகள் ஆதரவாகவும், தலைமை நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பு.
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று 4 விதமான தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் ஒரு தீர்ப்பையும், மற்ற 3 நீதிபதிகள் 3 தீர்ப்புகளையும் வழங்கியுள்ளனர்.
இதில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் தீர்பளித்துள்ளனர். அதாவது, 10% இடஒதுக்கீடு இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பை, அரசியலமைப்பை மீறவில்லை, 50% உச்ச வரம்பு என்பதை 10% இட ஒதுக்கீடு மீறவில்லை என நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியது சரி என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
சமூகம், கல்வியில் பின்தங்கியவர்கள் முன்னேறுவதாகவே இட ஒதுக்கீடு. அனைவரும் இலக்குகளை அடைய தேவையான கருவியாக இட ஒதுக்கீடு பயன்படுகிறது. எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம் திரிவேதி தீர்ப்பு அளித்துள்ளனர். பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத EWS இடஒதுக்கீட்டை வழங்கும் அரசியலமைப்பு 103வது திருத்தச் சட்டம் 2019இன் செல்லுபடியாகும் என்பதை நீதிபதி ஜேபி பார்திவாலாவும் உறுதியளித்தார்.
குறிப்பிட்ட சாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவதில் எந்த விதி மீறலும் இல்லை. ஒவ்வொரு இட ஒதுக்கீட்டிற்கும் கால நிர்ணயம் தேவை என்றும் பார்திவாலா கூறியுள்ளார். ஆதாயத்திற்காக இட ஒதுக்கீடு வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது சமத்துவத்திற்கு எதிரானதாக அமையவில்லை என நீதிபதி தினேஷ் மகேஸ்வரி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என 3 நீதிபதிகள் தீர்ப்பளித்த நிலையில், தலைமை நீதிபதி உள்பட இருவர் எதிராக தீர்பளித்துள்ளனர். 10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என 5 நீதிபதிகள் அமர்வில் ரவீந்திர பட் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதன்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என தீர்ப்பளித்துள்ளார். நீதிபதி ரவீந்திர பட் தெரிவித்துள்ள கருத்துகளுடன் முழுமையாக ஒத்துப்போகிறேன் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு யு லலித் பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 5 நீதிபதிகளில் 3 பேர் 10% இடஒதுக்கீடு வழங்கியது சரி என்றும் 2 பேர் தவறு எனவும் தீர்ப்பு அளித்தனர். இதன் காரணமாக பெரும்பான்மை நீதிபதிகள் சரி என்றதால் 10% இடஒதுக்கீடு உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…