#BREAKING: கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை கூலி 10% உயர்வு – அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

சிறந்த கைத்தறி நெசவாளர் விருது வழங்கும் திட்டத்தின் பரிசுத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.காந்தி சட்ட பேரவையில் அறிவிப்பு.

இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில் செய்தித்துறை, பத்திரப்பதிவு துறை மற்றும் கைத்தறி நெசவாளர் துறை ஆகியவை மீது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, பேசிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை கூலி மற்றும் அகலவிலைப்படி தலா 10% உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், கதர், பாலிவஸ்திரா ரகங்களை மக்கள் அறிந்து கொள்ள ரூ.20 லட்சம் செலவில் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தப்படும். சிறந்த கைத்தறி நெசவாளர் விருது வழங்கும் திட்டத்தின் பரிசுத்தொகை உயர்த்தி வழங்கப்படும். கைத்தறி ரகங்களின் பாரம்பரியம் மற்றும் கைத்தறினை பாதுகாக்காக ரூ.5 கோடியில் அருங்காட்சியகம் உருவாக்கப்படும்.

கைத்தறி நெசவாளர்களின் நல்வாழ்வுக்காக ஆரோக்கிய நெசவாளர் நல்வாழ்வு மற்றும் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 6 கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் 75 நிரந்தர பணியாளர்களுக்கு ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படும்.  திண்டுக்கல் சின்னாளபட்டியில் ரூ.6 கோடியில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், கோவையில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலை கழகத்தில் மருத்துவ சார்ந்த தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி தொடங்கப்படும் என பேரவையில் தெரிவித்தார். இதனிடையே, புவிசார் குறியீடு சட்டத்தின் கீழ் நெகமம் சேலைகள், வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள் மற்றும் உறையூர் பருத்தி சேலைகள் பதிவு செய்ய கைத்தறி துறையால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறியிருந்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

INDvsNZ : மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்.! 252 ரன்கள் ‘டார்கெட்’ வைத்த நியூசிலாந்து! 

INDvsNZ : மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்.! 252 ரன்கள் ‘டார்கெட்’ வைத்த நியூசிலாந்து!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

2 hours ago

உக்ரனை அடுத்து ஈரான்? அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட வேண்டும். இல்லையென்றால்? டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…

2 hours ago

INDvsNZ : தடுமாறும் நியூசிலாந்து! பந்துவீச்சில் மிரட்டும் இந்தியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

3 hours ago

4 மாவட்டங்களில் மிக கனமழை! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…

6 hours ago

சாமி இந்தியா ஜெயிக்கணும்.., மும்பை, உஜ்ஜயினி, லக்னோ கோயில்களில் சிறப்பு பூஜைகள்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…

7 hours ago

திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முக்கிய 3 முடிவுகள்.! 7 மாநிலங்களில் 29 கட்சிகளுக்கு முதலமைச்சர் கடிதம்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…

8 hours ago