#Breaking : வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு…! தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு….!

வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இடஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு குறித்து பல தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு தொடப்பட்ட நிலையில், உள் இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மதுரையை சேர்ந்த அபிஷ் குமார் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த நிலையில், உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.