BREAKING:+1, +2 வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம்.!

Published by
Dinasuvadu desk

+1 வகுப்புக்கு மார்ச் 26-ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஜூன் 16-ம் தேதியும், மார்ச் 24-ம் தேதி தேர்வில் கலந்து கொள்ளாத +2 மாணவர்களுக்கு  ஜூன் 18-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் மீதமுள்ள பிளஸ் 1 தேர்வு நடத்த அரசு திட்டமிட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரையும், பிளஸ் +1 பொதுத் தேர்வு ஜூன் 2-ஆம் தேதியும், அதேபோல கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி நடந்த தேர்வை எழுத முடியாமல் போன பிளஸ் +2 மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 6-ம் தேதி நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வாரம் அறிவித்தார்.

இந்நிலையில், கொரோனா ஒரு காலத்தில் பொது தேர்வு நடத்துவதால் மாணவர்களின் மனநலம் பாதிக்கும் என்றும் எனவே தேர்வை ஒத்திவைக்க பல தரப்பினர் கோரிவைத்தனர். இதைதொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்தார். பின்னர் நேற்று தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன்  பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடைபெறும் என்றும், இதைத்தொடர்ந்து +1 வகுப்புக்கு மார்ச் 26-ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஜூன் 16-ம் தேதி நடத்தப்படும் என்றும் , மார்ச் 24-ம் தேதி தேர்வில் கலந்து கொள்ளாத +2 மாணவர்களுக்கு  ஜூன் 18-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

6 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

14 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago