+1 வகுப்புக்கு மார்ச் 26-ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஜூன் 16-ம் தேதியும், மார்ச் 24-ம் தேதி தேர்வில் கலந்து கொள்ளாத +2 மாணவர்களுக்கு ஜூன் 18-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் மீதமுள்ள பிளஸ் 1 தேர்வு நடத்த அரசு திட்டமிட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரையும், பிளஸ் +1 பொதுத் தேர்வு ஜூன் 2-ஆம் தேதியும், அதேபோல கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி நடந்த தேர்வை எழுத முடியாமல் போன பிளஸ் +2 மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 6-ம் தேதி நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வாரம் அறிவித்தார்.
இந்நிலையில், கொரோனா ஒரு காலத்தில் பொது தேர்வு நடத்துவதால் மாணவர்களின் மனநலம் பாதிக்கும் என்றும் எனவே தேர்வை ஒத்திவைக்க பல தரப்பினர் கோரிவைத்தனர். இதைதொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்தார். பின்னர் நேற்று தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடைபெறும் என்றும், இதைத்தொடர்ந்து +1 வகுப்புக்கு மார்ச் 26-ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஜூன் 16-ம் தேதி நடத்தப்படும் என்றும் , மார்ச் 24-ம் தேதி தேர்வில் கலந்து கொள்ளாத +2 மாணவர்களுக்கு ஜூன் 18-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…