சென்னை:மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து,ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான வல்லுநர் குழு முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக,சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.இதன்காரணமாக,மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்,சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை குறைக்கும் விதமாகவும் மற்றும் மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல் போன்ற பணிகளை மேற்பார்வையிடுவதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில்,சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து முதற்கட்ட அறிக்கையை வல்லுநர் குழு,முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் தற்போது தாக்கல் செய்துள்ளது.
அதன்படி,சென்னையில் தற்காலிகமாக செய்ய வேண்டிய பணிகள் மற்றும் நிரந்தரமாக செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன? என்பது குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு முதல்வரிடம் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.அந்த அறிக்கையில்,சென்னையில் மழை நீர் வடிகால்களை அகலபடுத்துவதுடன் ஆழப்படுத்த வேண்டும் எனவும்,வடிகால் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில்…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் பேட்டிங்கிலும், பல வீரர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், அதிக…
சென்னை : கம்பேக் என்றால் இப்படி இருக்கவேண்டும் என தமிழ் சினிமாவில் அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் …
சென்னை : இன்று ஏப்ரல் 1 தமிழ் மாதமான சித்திரை 1ஆம் தேதியை, ஒரு பகுதியினர் தமிழ் புத்தாண்டு தினமாகவும், ஒரு…
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…
திருச்சூர் : நட்புக்கு ஒண்ணுன்னா நண்பர்கள் ஓடி வந்துருவாங்க., எனும் சொற்றொடர்களை அடிக்கடி கேட்டிருப்போம். அதற்கு ஏற்ற பல சம்பவங்களும்…