#Breaking:பொங்கல் சிறப்பு தொகுப்பில் கரும்பு;கண்காணிக்க குழு – தமிழக அரசு அரசாணை!

Default Image

சென்னை:குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய 2022-ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், கூடுதலாக கரும்பும் சேர்த்து வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலமாக பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்தும்,பொங்கல் சிறப்பு தொகுப்பபில் கரும்பை இணைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

மேலும்,இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:

“2022-ஆம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் கீழ்க்காணும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை. 2,15,48,060 குடும்ப அட்டைதாரர்களுக்கு பயனாளி ஒருவருக்கு ரூ.505/- செலவில் மொத்தம் ரூ. 1088,17,70,300/- (ரூபாய் ஆயிரத்து எண்பத்தெட்டு கோடியே பதினேழு இலட்சத்து எழுபதாயிரத்து முந்நூறு மட்டும்) செலவில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,குடும்ப அட்டை ஒன்றுக்கு வழங்கப்படும் பொருட்கள்:

  1. பச்சரிசி – ஒரு கிலோ,
  2. வெல்லம் – ஒரு கிலோ,
  3. முந்திரி – 50 கிராம்,
  4. திராட்சை – 50 கிராம்,
  5. ஏலக்காய் – 10 கிராம்,
  6. பாசிப்பருப்பு – 500 கிராம்,
  7. நெய் – 100 கிராம்,
  8. மஞ்சள்தூள் – 100 கிராம்,
  9. மிளகாய் தூள் – 100 கிராம்,
  10. மல்லித்தூள் – 100 கிராம்,
  11. கடுகு – 100 கிராம்,
  12. சீரகம் – 100 கிராம்,
  13. மிளகு – 50 கிராம்,
  14. புளி – 200 கிராம்,
  15. கடலைபருப்பு – 250 கிராம்,
  16. உளுத்தம்பருப்பு – 500 கிராம் ,
  17. ரவை – 1 கிலோ,
  18. கோதுமை மாவு – 1 கிலோ,
  19. உப்பு – 500 கிராம்,
  20. துணிப்பை – 1.

மேலும்,அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஆக மொத்தம் ரூ.2,15,48,060/- குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், கூடுதலாக கரும்பும் சேர்த்து வழங்க, கரும்பு ஒன்றுக்கு ரூ.33/ வீதம் (போக்குவரத்து செலவு உட்பட) மொத்தம் ரூ.71,10,85,980/- (ரூபாய் எழுபத்து ஒரு கோடியே பத்து இலட்சத்து எண்பத்தைந்தாயிரத்து தொள்ளாயிரத்து எண்பது கோடி செலவில் கரும்பினை கொள்முதல் செய்து வழங்கலாம் எனவும்,

குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்வதற்கு, மாவட்ட ஆட்சியர் தலைமையில், சம்மந்தப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர்,மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு நுகப்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ஆகியோர் உள்ளடக்கிய குழு அமைத்திட உரிய அனுமதியும், பொங்கல் பரிசுத் தொகுப்பான 20 பொருட்களில், முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம் மற்றும் ஏலக்காய் 10 கிராம் ஆகியவைகளை மட்டும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மூலம் கொள்முதல் செய்து, நியாய விலைக்கடைகள் மூலம் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யவும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பாக, விரிவான அறிவுரைகள் தனியே வழங்கப்படும்”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்