#Breaking:தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி…தடுப்பூசி கட்டாயம்!

Published by
Edison

மதுரை:பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி,அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி,அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் சிறிது நேரத்திற்கு முன்னதாக தொடங்கியது.இதில் 700 காளைகள்,300 வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதையடுத்து,மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ,நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்துள்ளார்கள்.

இதனையடுத்து,வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்து வருகின்றன.அதில் சில காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து வெற்றி கண்டு வருகின்றனர்.மேலும்,சிறந்த வெற்றியாளர்களுக்கு கார்,பைக், தங்க நாணயங்கள் உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் காத்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து,அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது மாலை 4 மணி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில்,மாடுபிடி வீரர்கள்,ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் கொரோனா நெகடிவ் சான்றும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதே சமயம்,1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க 50 பேர் கொண்ட மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியைக் காண உள்ளூர் மக்கள் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக,வெளியூரில் வசிப்பவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தொலைக்காட்சி,இணையம் வழியாக பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளர்கள்.

இதற்கிடையில்,அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழக முதல்வர் சார்பில் சிறந்த காளைக்கு சிறப்புப் பரிசாக கார் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

10 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

22 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

38 mins ago

மணிமேகலை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

41 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

48 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

53 mins ago