சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ரவியுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் திடீர் சந்திப்பு நடத்தினர்.நீட் விலக்கு மசோதாவை குடியரசுக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ள நிலையில்,ஆளுநரை அமைச்சர்கள் சந்தித்தனர்.
இந்நிலையில்,இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில்,”சட்டப்பேரவையில் முன்னதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக தமிழக முதல்வரிடம் ஏற்கனவே ஆளுநர் உறுதி அளித்திருந்தார். ஆனால்,உறுதியளித்தபடி ஆளுநர் செயல்படவில்லை.
பல முறை அழுத்தம் கொடுத்ததும் நீட் மசோதாவை ஆளுநர் கிடப்பில் வைத்துள்ளார்.எனவே,நிலுவையில் உள்ள நீட் மசோதாவுக்கு உடனே ஒப்புதல் அளித்து குடியரசுத்தலைவருக்கு அனுப்ப நேரில் வலியுறுத்தினோம்.ஆனால்,எங்கள் இருவரிடத்திலும் எந்தவிதமான உத்திரவாதத்தையும் ஆளுநர் அளிக்கவில்லை.எனவே,தமிழ்நாடு அரசின் மாண்பு காக்கப்படவில்லை என்பதால் இன்று மாலை நடைபெறும் ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக கலந்து கொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…