காலை சிற்றுண்டி, மாலை தானியங்கள்.! அசத்தும் முன்னாள் மாணவர்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • புதுக்கோட்டையில் அரசு மேல்நிலை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைந்து முன்னாள் மாணவர்கள், தற்போது படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும், மாலையில் தானியங்கள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டையில் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 10, 11,12-ம் வகுப்புகளில் சுமார் 120  மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் பள்ளி, மருத்துவமனை, குடிநீர் வசதி போன்ற வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னாள் மாணவர்கள் அவர்களது பங்களிப்பை அளித்து வருகிறார்கள். அந்த வகையில் அரசு மேல்நிலை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்  கழகத்துடன் இணைந்து முன்னாள் மாணவர்கள், தற்போது படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி மேம்பட பள்ளியில் காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும், மாலையில் தானியங்கள் மற்றும் பிஸ்கெட் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

காலை சிற்றுண்டி, மாலை தானியங்கள்.! அசத்தும் முன்னாள் மாணவர்கள்.!

இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழகம் கூறுகையில், 10, 11,12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் காலையில் பள்ளிக்கு வரும் போது சிலர் சாப்பிடாமலேயே வருவதால் சோர்வடைந்து விடுகிறார்கள். இதை காரணமாக கொண்டு அவர்கள் சோர்வடையாமல் இருக்க தினமும் இட்லி, பூரி மற்றும் பொங்கல் என காலை உணவுகளை வழங்கி வருகிறோம். மேலும் மாலை 6 மணி வரை மாணவர்கள் பள்ளியில் படிப்பதால்  அவர்கள் களைப்படையாமல் இருக்க ஒவ்வொரு நாளும் தானியங்கள் அதனுடன் சேர்த்து பிஸ்கெட் கொடுத்து வருகிறோம்.

இந்த திட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதியோடு வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு நாளுக்கு சுமார் ரூ.2300 வரை செலவாகிறது. இதற்காக கிராம மக்களும் தங்களது பங்களிப்பை போட்டிபோட்டு வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்று கிராம மக்கள் பங்களிப்பை செய்தால் நிச்சியமாக படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் மற்றும் மதிப்பெண் உயரும் என தெரிவித்தனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago