மருத்துவர்கள் நாளையும் பணிக்கு வராவிடில் பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவர்கள் போராட்டம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் ஆலோசனை நடத்தினார் .இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன் பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்,அரசு மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை உடனே விலக்கிக்கொள்ள வேண்டும் .அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது .எவ்வித முன்னறிவிப்பின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சில மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவர்கள் நாளையும் பணிக்கு வராவிடில் பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும்.பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கைக்கு உள்ளாகும் பணிக்கு வராத மருத்துவர்களின் பணியிடங்கள், காலி பணியிடமாக கருதப்பட்டு மாற்று மருத்துவர் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…