விசாரணை கைதி விக்னேஷ் மரண விவகாரத்தில் போலீஸ் தந்த நிவரானதுஇ திருப்பி அளிக்க குடும்பத்தினர் முடிவு.
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணத்தில் ரூ.1 லட்சம் நிவாரணத்தை திருப்பி அளிக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணையின்போது பணத்தை திருப்பி தர குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். விக்னேஷ் மரணத்தில் காவல்துறை மீது குற்றசாட்டு எழுந்த நீலையில், நிவாரண தொகையை நீதிமன்றத்தில் அளிக்க முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் தலைமை செயலக களனி காவல்நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் சந்தேகமான முறையில் மரணமடைந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ஏற்கனவே, விசாரணை கைதி சந்தேக மரணம் தொடர்பாக விக்னேஷின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் ரூ.1 லட்சம் கொடுத்ததாக குற்றசாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவரது குடும்பத்தினரும் குற்றசாட்டை முன் வைத்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேற்கொண்டு எந்த விஷயமும் பேச கூடாது என்று தெரிவித்தாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், விக்னேஷின் குடும்பபத்தினர், காவல்துறை கொடுத்த நிவாரண தொகையை நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
கடந்த 18-ஆம் தேதி புரசைவாக்கதில் ஆட்டோவில் வந்த விக்னேஷ், சுரேஷ் ஆகிய இருவரை காவல்துறை கையது செய்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸ் ஆட்டோ ஓட்டுனரையும் அடையாளம் கண்டனர். இந்த வழக்கு தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 3 பொலிஸாரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…