விசாரணை கைதி விக்னேஷ் மரண விவகாரத்தில் போலீஸ் தந்த நிவரானதுஇ திருப்பி அளிக்க குடும்பத்தினர் முடிவு.
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணத்தில் ரூ.1 லட்சம் நிவாரணத்தை திருப்பி அளிக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணையின்போது பணத்தை திருப்பி தர குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். விக்னேஷ் மரணத்தில் காவல்துறை மீது குற்றசாட்டு எழுந்த நீலையில், நிவாரண தொகையை நீதிமன்றத்தில் அளிக்க முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் தலைமை செயலக களனி காவல்நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் சந்தேகமான முறையில் மரணமடைந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ஏற்கனவே, விசாரணை கைதி சந்தேக மரணம் தொடர்பாக விக்னேஷின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் ரூ.1 லட்சம் கொடுத்ததாக குற்றசாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவரது குடும்பத்தினரும் குற்றசாட்டை முன் வைத்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேற்கொண்டு எந்த விஷயமும் பேச கூடாது என்று தெரிவித்தாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், விக்னேஷின் குடும்பபத்தினர், காவல்துறை கொடுத்த நிவாரண தொகையை நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
கடந்த 18-ஆம் தேதி புரசைவாக்கதில் ஆட்டோவில் வந்த விக்னேஷ், சுரேஷ் ஆகிய இருவரை காவல்துறை கையது செய்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸ் ஆட்டோ ஓட்டுனரையும் அடையாளம் கண்டனர். இந்த வழக்கு தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 3 பொலிஸாரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…