விளையாட தொட்டில் கட்டிய புடவையில் கழுத்து இறுக்கி சிறுவன் உயிரிழப்பு!

Published by
Rebekal
புடவைவயால் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் சிறுவன் கழுத்து இறுக்கி உயிரிழந்துள்ளார்.
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் பகுதியில் தாங்கல் எனும் தெருவை சேர்ந்த ரகுபதி ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 11 வயதில் ஆறாம் வகுப்பு படிக்க கூடிய பாலாஜி என்னும் மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தனது மனைவியுடன் ரகுபதி வெளியே கடைக்கு சென்றிருந்த போது வீட்டில் அவரது மகன் பாலாஜி புடவையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் பக்கத்து வீட்டுக்காரர் கோவிந்தராஜ் அவர்களின் வீட்டு கதவு திறந்திருப்பதை பார்த்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது சிறுவன் பாலாஜி புடவையால் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் கழுத்து இறுக்கி மயங்கி கிடந்ததை கண்டு அருகில் உள்ளவர்கள் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் பாலாஜி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ராயலா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன்பின் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும் புடவையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபொழுது கழுத்து இறுகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published by
Rebekal

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

4 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

4 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

5 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

5 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

7 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

8 hours ago