40 கல்லூரி விடுதிகளுக்கு புத்தகங்கள் வழங்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Default Image

40 கல்லூரி விடுதிகளுக்கு போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் வழங்க ரூ.10 லட்சம் செலவில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

முன்னதாக நடைபெற்ற 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது “கல்லூரி விடுதிகளில் தங்கி பயின்று வரும் மாணவ, மாணவியர் வேலை வாய்ப்புக்கான போட்டி தேர்வுகளில் பங்கேற்பதை ஊக்கப்படுத்தும் பொருட்டு, விடுபட்டுள்ள 40 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்லூரி விடுதிகளுக்கு, போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் 10 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில்,பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் சார்ந்து முந்தைய ஆண்டுகளில் விடுபட்ட 40 கல்லூரி விடுதிகளுக்கு போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்களை வழங்க ரூ.10 லட்சம் செலவில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்