வெடிகுண்டு மிரட்டல் – இன்டர்போல் உதவியை நாட முடிவு..!

Published by
murugan

நேற்று சென்னையில் உள்ள சென்னை கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 13 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். 13 இந்த பள்ளிகளுக்கு நேற்று காலை ‘jhonflow1@proton.me’ என்ற பெயரில் தனித்தனியாக மின்னஞ்சல் வந்தது.

வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல்சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் அந்தந்த பள்ளிகள் முன்பு குவிந்தனர்.  இதனால் பதற்றமான நிலை காணப்பட்டது. பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 13 தனியார் பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின்படி காவல்துறை மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர் மீது வழக்குபதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வந்தனர்.

இன்று ஆ.ராசாவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்..!

இந்நிலையில், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் ஐ.பி முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இன்டர்போல்  போலீஸ் உதவி நட சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது. வெளிநாடுகளின் தனியார் நெட்வொர்க் பயன்படுத்தி இந்த மின்னஞ்சல் அனுப்பி இருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் முழுமையாக சோதனை நடத்தியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அச்சமின்றி பள்ளிகளை நடத்த அந்தந்த காவல் நிலைய போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கும் உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago