கங்கை நதியில் மிதக்கும் பிணங்கள்: மக்களையும் காக்கவில்லை, நதிகளையும் காக்கவில்லை – கமல்ஹாசன் ட்வீட்

Default Image

கங்கை நதியில் கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை கங்கை நதியில் தூக்கி வீசப்படுவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தூக்கி வீசப்படும் பிணங்கள் கங்கை நதியில் மிதந்து வருவதாகவும் அவை அழுகி சுற்றுச்சூழலை கெடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், மக்கள் நீதி நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்ட ‘நமாமி கங்கா’வில் கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன. மக்களையும் காக்கவில்லை, நதிகளையும் காக்கவில்லை. ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்கள் பரிதாபமாகக் கலைகின்றன என கூறியுள்ளார்.

இது குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கனவே மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Tamilnadu CM MK Stalin
tvk vijay
PM Modi - Delhi opposition leader Atishi
CM STALIN - Boxing
INDvPAK ICC CT 2025
US President Donald Trump - Elon musk