அறங்காவலர் குழு விரைவில் அமைக்கப்படும்- அமைச்சர் சேகர்பாபு..!

Default Image

திருத்தணி முருகன் கோவிலுக்கான வெள்ளித்தேர் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திருத்தணி கோவில் ராஜகோபுரம் ரதவீதி வரை ரூ.9 லட்சத்த்தில் 56 படிக்கட்டுகளை  அமைக்க அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் சேகர்பாபு , தமிழ்நாட்டில் காலியாக உள்ள கோவில் அறங்காவலர் குழு விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருத்தணி கோவிலில் மாற்றுப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  திருத்தணி கோவிலில் பக்தர்களுக்கான தங்கும் அறைகளும் விரைவில் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். திருத்தணி முருகன் கோவிலுக்கான வெள்ளித்தேர் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்