என்ன கொடுமை சார்.! அமைச்சர் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்ப மறுப்பு..பொதுமக்களுடன் அரசு பேருந்தில் பயணம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • காரைக்கால் அமைச்சர் கமலக்கண்ணனின் அமுதசுரபி பெட்ரோல் நிலையத்திற்கு சென்று டீசல் நிரப்ப கேட்டுள்ளனர். அதற்கு அமுதசுரபி ஊழியர்கள் டீசல் நிரப்ப மறுத்துவிட்டார்கள்.
  • புதுச்சேரியில் அமைச்சரவை கூட்டம் இருப்பதால சகா பயணிகளுடன் அரசு பேருந்தில்  தனக்கென டிக்கெட் எடுத்துக்கொண்டு பயணித்த நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

புதுச்சேரி அரசு துறைகள் மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் நிரப்ப படுகின்றது. இந்நிலையில் புதுச்சேரி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் காரைக்காலை சேர்ந்த வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனின் வாகனம் நேற்று மாலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அமுதசுரபி பெட்ரோல் நிலையத்திற்கு சென்று டீசல் நிரப்ப கேட்டுள்ளனர். அதற்கு அமுதசுரபி ஊழியர்கள் டீசல் நிரப்ப மறுத்துவிட்டார்கள்.

இதனிடையே நேற்று மாலை அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் கமலகண்ணன் காரைக்கால் பேருந்து நிலையத்திற்கு வந்து புதுச்சேரிக்கு செல்லருக்கும் அரசு பேருந்தில் ஏறி அமர்ந்தார். பின்னர் அவருக்கான பயணம் டிக்கெட்டுக்கு பணம் கொடுத்து வாங்கிக்கொண்டு சக பயணிகளுடன் புதுச்சேரிக்கு பயணித்தார். இந்த சம்பவம் காரைக்கால் பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அமுதசுரபி ஊழியரிடம் கேட்டபோது, கடந்த 4 மாதத்தில் அரசுத் துறைகளைச் சேர்ந்த வாகனங்களுக்கு ரூ.2 கோடிக்கு மேல் பாக்கிய உள்ளதால் ஜனவரி 1-ம் தேதி முதல் டீசல் வழங்க முடியாது என கூறிவிட்டதாக தெரிவித்தனர். அவ்வப்போது எரிபொருள் இல்லாத காரணத்தால் அமைச்சரின் வாகனம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

12 hours ago
சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

13 hours ago
“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

13 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

14 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

15 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

16 hours ago