இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளாவுக்கு டும் டும் டும்… காதலரை கரம் பிடிக்கிறார்

Published by
Castro Murugan
திண்டுக்கல்: மணிப்பூரில் இரும்புப் பெண்மணியாக பல ஆண்டுகள் போராடிய இரோம் சர்மிளா மிக விரைவில் திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கிறார். கொடைக்கானல் சார்பதிவாளரிடம் திருமண பதிவுக்காக விண்ணப்பம் செய்துள்ளார் இரோம் சர்மிளா.
மணிப்பூரில் ராணுவ சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் இரோம் ஷர்மிளா. அவரின் உண்ணாவிரதப் போராட்டம் 17 ஆண்டுகளாக நடந்தது.
உலகில் வேறு யாரும் அகிம்சை போராட்டத்தை இவ்வளவு ஆண்டுகளாக நடத்தியிருப்பார்களா என்பது கேள்விக்குறியே. இந்நிலையில், தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு தேர்தல் அரசியலில் குதித்தார் இரோம்.
சிலமாதங்களுக்கு முன்பு மணிப்பூரில் நடந்த தேர்தலில் இரோம் போட்டியிட்டார். அதில் மிக மிக சொற்பமான வாக்குகளை பெற்று தோல்வியை அவர் தழுவினார். தனது இளமை காலத்தை போராட்ட வாழ்வுக்கு அர்ப்பணித்த இரோமுக்கு மணிப்பூர் மக்கள் கொடுத்த பரிசு சொற்ப வாக்குகள்தான். இதனை உணர்ந்த அவர் அந்த மாநிலத்தை விட்டே வெளியேறினார்.
தேர்தல் தோல்வியால் விரக்தி அடைந்த இரோம், தமிழகத்தின் கொடைக்கானல் மலைக்கு வந்து தங்கினார். அவருடன் அவரின் நீண்ட நாள் காதலரான தேஷ்மந்த் கோட்டின்கோவும் கொடைக்கானல் வந்து சேர்ந்தார்.
போராட்ட வாழ்க்கையை விடுத்து, திருமண வாழ்க்கையை வாழ முடிவெடுத்துள்ளார் இரோம். இது குறித்து இரோம் சர்மிளா கூறுகையில், எனக்கு தேவையான அமைதி கொடைக்கானலில் கிடைத்துள்ளது. எனது போராட்ட வாழ்வு வேறு வடிவத்தில் தொடரும்.
தேஷ்மந்த் கோட்டின்கோ கொடைக்கானலில் தங்கியிருந்து ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். திருமணத்துக்குப் பின் அவருடன் கொடைக்கானலிலேயே தங்கிவிடுவேன்.
மணிப்பூரில் 16 வருடங்களாக போராடி வந்த நான் தோல்வியைத் தழுவி இருந்தாலும் சோர்ந்து போகவில்லை. புதிய வகையில் நான் போராட தயாராகி உள்ளேன்.
மணிப்பூரில் தற்போதும் ராணுவத்தினர் கற்பழிப்பு மற்றும் கொலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து புதிய வழியில் போராட உள்ளேன்.
30 நாட்களும் எந்த எதிர்ப்பும் இல்லாத நிலையில், எங்களின் திருமணம் நிகழும். இந்திய தனி திருமணச் சட்டத்தின்படி கொடைக்கானலிலேயே திருமணம் நிகழ்வு நடக்கும் ‘ என்று தெரிவித்தார்.
Published by
Castro Murugan

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

11 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

11 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

12 hours ago