தொகுதி பங்கீடு இழுபறி…நாளை மதிமுக ஆலோசனை..!

மதிமுக நாளை சார்பில் உயர்நிலை கூட்டம் நடைபெறஉள்ளது.
திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில், நேற்று 2-ம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையில் மதிமுகவின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன் பேசிய பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மல்லை சத்யா, அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு திமுக மீண்டும் அழைக்கும் என்று தெரிவித்தார். கடந்த பேச்சு வார்த்தையின்போது திமுக தரப்பில் என்ன சொன்னார்களோ அதை தான் இப்போதும் சொன்னார்கள் என தெரிவித்தார்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள மதிமுக தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கும் நிலையில், நாளை மதிமுக சார்பில் உயர்நிலை கூட்டம் நடைபெற உள்ளது. இதுவரை திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 11 இடங்களை ஒதுக்கியுள்ளது. அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025