பாமக நிறுவுனர் ராமதாஸுடன் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவுனர் ராமதாஸுடன் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸை சந்தித்து, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கேட்கும் பாமக கோரிக்கை பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் இல்லத்தில் கடந்த மாதம் 22-ஆம் தேதி அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையிலான குழு முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இரு தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தியது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவது உறுதியாகும் என தெரிகிறது.
கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் வன்னியர் சமுகத்திற்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக பல்வேறு போராட்டம் நடத்தி வருகிறது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கவும், இதனை சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்னதாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு…
சென்னை : விடாமுயற்சி படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.…
நாக்பூர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வென்ற இந்தியா அதே தெம்புடன் இன்று…
பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான…
நாக்பூர் : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
சென்னை : நடிகர் அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி காலை முதலே அஜித்…