தேர்வில் முறைகேடு : கருப்பு ஆடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் ஜெயக்குமார்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து தொடர்பாக அதிகாரிகளுடன், அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக பயிற்சி மையங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தொடர்பாக தனி மசோதா வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.இதன் அடிப்படையில், தேர்வாணையம் நடத்திய விசாரணையில், 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்தது மட்டும் அல்லாமல் ,அவர்களுக்கு வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத கூடாது என்ற தடையும் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.இதனிடையே டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக அதிகாரிகளுடன், அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் பேசுகையில், டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக பயிற்சி மையங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தொடர்பாக தனி மசோதா வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்.குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து கருப்பாடுகளும் களையெடுக்கப்பட்டு, எதிர்காலத்தில் கருப்பாடுகளே இல்லாத நிலையை தமிழக அரசு உருவாக்கும்.தேர்வை ரத்து செய்ததால் ஞாயமாக தேர்வு எழுதியவர்களின் நிலை என்னாவது என்றும் கேள்வி எழுப்பினார். ஒரு சில மையங்களில் நடந்த முறைக்கேட்டால் ஒட்டுமொத்தமாக குறைகூற கூடாது.தரவரிசைப் பட்டியலில் அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025