கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் கோவையில் 30 பேருக்கு ஒரு கண் பார்வையிழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒன்றரை வருடத்திற்கு மேலாக உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. குறிப்பாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை காரணமாக கொரோனவிலிருந்து மீண்டவர்களுக்கு மிக பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை 264 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 30 பேருக்கு ஒரு கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த மருத்துவமனையின் டீன் டாக்டர் என்.நிர்மலா அவர்கள் கூறியுள்ளார். மேலும், இது குறித்து பேசிய அவர், கண்பார்வை இழப்பு ஏற்பட்ட அனைத்து நோயாளிகளும் தாமதமாக வந்தவர்கள் என கூறியுள்ளார்.
மேலும், அறிகுறிகளை கண்டதும் மருத்துவமனை விரைந்த அனைத்து நோயாளிகளுமே முழுமையாக குணமடைந்து உள்ளதாக கூறிய அவர், ஏற்கனவே சுகாதாரத்துறை மூக்கில் இரத்தம், சிவந்த கண் மற்றும் முகம், பல் வலி ஆகியவை தான் இதற்கான அறிகுறி என விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே லேசான அறிகுறிகள் உள்ள போதே மருத்துவமனைக்கு வந்து விட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…