தூத்துக்குடியில் நாளை கருப்புக்கொடி கட்டி போராட்டம் அறிவிப்பு..!

Published by
murugan

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து தூத்துக்குடியில் நாளை வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம்.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதி வழங்கவேண்டும் என கூறி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்தது.

பின்னர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிப்பது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட்டை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை இயங்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், இன்று தூத்துக்குடி ஆட்சியரை ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சந்தித்தனர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது  அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மீண்டும் கூட்டி ஸ்டெர்லைட்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி நீதிமன்றத்தில் அளிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஆட்சியரை சந்தித்த பிறகு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அரிராகவன் நாளை ஒருநாள் தூத்துக்குடியில் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

ஆர்சிபி சிறந்த அணி தான் ஆனா நாங்க…வருண் சக்கரவர்த்தி ஃபயர் ஸ்பீச்!

ஆர்சிபி சிறந்த அணி தான் ஆனா நாங்க…வருண் சக்கரவர்த்தி ஃபயர் ஸ்பீச்!

கொல்கத்தா : 18 வது சீசனுக்கான  ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …

7 hours ago

பதவிக்காகவோ புகழ்ச்சிக்காகவோ அரசியலுக்கு வந்தவன் அல்ல நான் – இபிஎஸ் பேச்சு!

சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…

8 hours ago

குறுக்க இந்த மழை கௌசிக் வந்தா? அபாயத்தில் முதல் ஐபிஎல் போட்டி? ஆரஞ்சு அலர்ட்!

கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…

9 hours ago

ஊழலை மறைக்க மொழியின் பெயரால் அரசியல் செய்றாங்க! அமித் ஷா பேச்சு!

டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி  முதல் தொடங்கிய நிலையில், வரும்  ஏப்ரல் 6-ஆம் தேதி…

9 hours ago

ஐபிஎல் 2025 : சென்னை போட்டிக்கு டிக்கெட் வாங்குங்க…மெட்ரோவில் ஃபிரியா பயணம் பண்ணுங்க!

சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…

10 hours ago

இதுதான் அரசியல்., திமுக அழைப்பிற்கு பவன் கல்யாண் ஆதரவு! நாளை வருகை..,

சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…

10 hours ago