ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து தூத்துக்குடியில் நாளை வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம்.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதி வழங்கவேண்டும் என கூறி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
பின்னர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிப்பது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட்டை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை இயங்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், இன்று தூத்துக்குடி ஆட்சியரை ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சந்தித்தனர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மீண்டும் கூட்டி ஸ்டெர்லைட்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி நீதிமன்றத்தில் அளிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஆட்சியரை சந்தித்த பிறகு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அரிராகவன் நாளை ஒருநாள் தூத்துக்குடியில் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…