ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்.! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பரிந்துரைத்து இருந்தது. ஆனால் அந்த பரிந்துரையை ஏற்க பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துவிட்டார். இதற்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் என்ற அடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளார்.

ஆளுநர் பொய் சொல்வதையே தொழிலாக கொண்டுள்ளார் – அமைச்சர் பொன்முடி.

இந்த விழாவை புறக்கணிப்பதாக ஏற்கனவே தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சங்கரய்யா அவர்கள் நாட்டுக்காக போராடி பலமுறை சிறை சென்றவர். தமிழகத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் போல பேசும் ஆளுநர் ஏன் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் அளிப்பதில் ஒப்புதல் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டு, ஆளுநர் பொய்களை மட்டுமே பேசி வருகிறார் என்றும் குற்றம் சாட்டி, இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ளும் பட்டமளிப்பு விழாவில் தான் கலந்து கொள்ளவில்லை என அறிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து நேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

மதுரையில் இருந்து காமராஜர் பல்கலைக்கழகம் செல்லும் வழியில் ஆளுநர் செல்லும் போது நாகமலை – புதுக்கோட்டை பகுதியில் கருப்பு கொடி போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட உள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

வெயிலுக்கு இதமாய் வரும் மழை.! இந்த மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…

1 hour ago

டாஸ்மாக் விவகாரம்: தமிழ்நாடு அரசின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்க.! அமலாக்கத்துறை பதில் மனு…

சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…

1 hour ago

“திருச்சியை தலைநகராக மாத்துங்க”! நயினார் கோரிக்கையை அன்போடு பரிசீலிப்போம்- முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…

2 hours ago

முடிஞ்சா மோதி பாருங்க!! ரசிகர்களால் ரோஹித்துக்கு புதிய சாதனை.! என்ன தெரியுமா?

மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…

3 hours ago

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து! 33 பேர் காயம்..மீட்பு பணி தீவிரம்!

மலேசியா :  தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…

3 hours ago

அச்சுறுத்தும் தெருநாய்க்கடி: “ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம்” – அன்புமணி

சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…

3 hours ago