ஏப்ரல் 14இல் திருச்செந்தூரில் நடைபயணம் தொடங்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.!

Default Image

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் ஏப்ரல் 14ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். 

கடலூரில் இன்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் தொடங்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பூத் கமிட்டியை பலப்படுத்துவது, கட்சிக்கு நிதி சேர்ப்பது, வேங்கை வயல் சம்பவத்திற்கு திமுக பொறுப்பேற்க வேண்டும், ராமர் பாலத்தை பாதிக்காமல் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்