பெரியார் சிலை விவகாரம்.. அண்ணாமலை கொடுத்த புது விளக்கம்.!

Published by
மணிகண்டன்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , தமிழகம் முழுவதும் “என் மண் என் மக்கள்” எனும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நாடாளுமன்ற தேர்தல் குறித்த பிரச்சார வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதே வேளையில் திராவிட கட்சிள் மீதும் தங்கள் விமர்சனத்தை முன் வைத்து வருகினறார்.

நேற்று முன்தினம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் “என் மண் என் மக்கள்” சுற்றுப்பயண மேடையில் பேசுகையில், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த உடன் ஸ்ரீரங்கம் கோவில் வெளியே உள்ள கடவுள் இல்லை எனும் பலகை அகற்றப்படும் அதே போல கடவுள் மறுப்பாளர் (தந்தை பெரியார்) சிலையும் அகற்றப்படும் என தெரிவித்தார்.

பெரியார் சிலை விவகாரம்.! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்.!

மேலும், பாஜக தமிழக ஆட்சி பொறுப்பை ஏற்ற நாள் தான் இந்து அறநிலையத்துறையின் கடைசி நாள் என்றும் அண்ணாமலை ஸ்ரீரங்கத்தில் பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று திருச்சியில் நடைபெற்ற “என் மண் என் மக்கள்”  சுற்றுப்பயண மேடையில் அண்ணாமலை பேசுகையில், நாங்கள் பெரியார் சிலையை உடைக்க மாட்டோம். தலைவர்கள் சிலையை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு மாற்றி வைப்போம் எனவும் கோவிலுக்கு வெளியே யார் இருக்க வேண்டும், தலைவர்கள் சிலை எங்கு இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்து செயல்படுத்துவோம் என பேசியிருந்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

2 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

2 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

3 hours ago

உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…

4 hours ago

இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…

4 hours ago

இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…

4 hours ago